search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைமை நீதிபதி"

    • உச்சநீதிமன்றம் செல்வம், சமூக அந்தஸ்து, ஜாதி, மதம், பாலினம், அதிகாரத்தில் யார் இருக்கிறார்கள் என்பதை பார்க்காது.
    • நாங்கள் எப்போதும் சாமானிய மக்களுக்காக இருக்கிறோம் என்ற தகவலை அனைவருக்கும் சொல்ல விரும்புகிறேன்.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் என்.டி.டிவி.-க்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உச்சநீதிமன்றம் எப்போதும் நாட்டின் மக்களுக்காக இருக்கிறது. உச்சநீதிமன்றம் செல்வம், சமூக அந்தஸ்து, ஜாதி, மதம், பாலினம், அதிகாரத்தில் யார் இருக்கிறார்கள் என்பதை பார்க்காது. உச்சநீதிமன்றத்தில் சிறிய வழக்கு என்று ஏதும் கிடையாது.

    உச்சநீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதித்துறைகளையும் ஆண்கள் மற்றும் பெண்கள் எளிதாக தொடர்பு கொள்வதை உறுதி செய்யும் வகையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் கவனம் செலுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    நாங்கள் எப்போதும் சாமானிய மக்களுக்காக இருக்கிறோம் என்ற தகவலை அனைவருக்கும் சொல்ல விரும்புகிறேன்.

    சில நேரங்களில் எனக்கு நள்ளிரவில் கூட இ-மெயில் வந்துள்ளது. ஒரு முறை பெண் ஒருவர் மருத்துவ கருக்கலைப்பு தேவை எனக் கூறியிருந்தார். என்னுடைய ஸ்டாஃப்கள் என்னை தொடர்பு கொண்டனர். நாங்கள் அடுத்த நாள் அதற்கான பெஞ்ச் அமைத்தோம்.

    சிலர் வீடு இடிக்கப்பட்டிருக்கலாம், சிலர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கலாம், சிலர் சரணடைய வேண்டிய நிலையில் உடல் நலம் சரியில்லாமல் இருந்திருக்கலாம்... இதுபோன்ற இதயத்தை நொறுக்கும் வழக்குகள் அனைத்தும் தீவிர கவனம் செலுத்தப்படுகின்றன.

    எந்த வழக்கும் சிறிய வழக்கு என்று கிடையாது. நாங்கள் ஒவ்வொருவரையும் சமமாக நடத்துகிறோம். சாமானிய மக்களுக்கு ஆதரவாக நிற்பதே எங்கள் நோக்கம். யார் ஆட்சியில் இருந்தாலும், சாதாரண மக்களுக்கு கவலைகள் உள்ளன, சட்டத்தைப் பாதுகாப்பதில் நீதித்துறை முக்கிய அங்கம் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்.

    சமானிய மனிதன் எந்தவொரு பிரச்சனையை சந்தித்தாலும், முதலில் மாவட்ட நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும். அங்குள்ள நீதிபதிகளை சந்திப்பது முக்கியமானது என்று நினைத்தேன். மாவட்ட அளவிலான நீதிமன்றங்களை வலுப்படுத்தும்போது, நீதித்துறையுடன் மக்கள் தொடர்பை வலுப்படுத்துகிறோம்.

    இவ்வாறு டி.ஓய். சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

    • வழக்கறிஞர் ஒருவர் நடந்து கொண்ட விதம் தலைமை நீதிபதியை கோபத்திற்கு உள்ளாக்கியது.
    • இதனால் சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எச்சரித்தார்.

    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கமான அலுவல்கள் நடைபெற்றன. அப்போது, மனு ஒன்றை விசாரிப்பது தொடர்பாக வக்கீல் ஒருவர் தனது குரலை உயர்த்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் தலைமை நீதிபதி சந்திரசூட் கடும் அதிருப்திக்கு உள்ளானார்.

    இதையடுத்து, நீதிபதி சந்திரசூட், அந்த வழக்கறிஞரை கடுமையாக எச்சரித்தார். அப்போது நீதிபதி சந்திரசூட் கூறியதாவது:

    ஒரு நொடி பொறுமையாக இருங்கள். நீங்கள் நாட்டின் முதன்மையான நீதிமன்றமான சுப்ரீம் கோர்ட்டில் வாக்குவாதம் செய்கிறீர்கள். உங்கள் சத்தத்தை குறைக்கவும். இல்லையென்றால் உங்களை வெளியேற்ற வேண்டியிருக்கும். நீங்கள் வழக்கமாக எங்கு ஆஜராவீர்கள்? ஒவ்வொரு முறையும் நீதிபதியிடம் இப்படித்தான் முறையீடுவீர்களா?

    கோர்ட்டில் கண்ணியத்தை கடைப்பிடிப்பது அவசியம். உங்கள் குரலை உயர்த்திப் பேசி எங்களை அதட்டி பார்க்கலாம் என நினைக்கிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள்.

    23 ஆண்டுகளில் இப்படி ஒருபோதும் நடைபெற்றது இல்லை. எனது பணிக்காலத்தில் கடைசி ஆண்டில் இப்படி நடக்கக்கூடாது என தெரிவித்தார்.

    தலைமை நீதிபதியின் கண்டனத்தால் அதிர்ச்சி அடைந்த வழக்கறிஞர் அவரிடம் மன்னிப்பு கோரினார்.

    • தேர்தல் ஆணையர் நியமன மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
    • இதனை எதிர்த்து மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

    புதுடெல்லி:

    இந்தியாவின் அரசியலமைப்பின்படி நிர்வாகம் (Executive), பாராளுமன்றம் (Legislature) மற்றும் நீதித்துறை (Judiciary) என மூன்றும் முக்கியமான அங்கங்கள். அவ்வப்போது இவற்றிற்கிடையே கருத்து வேறுபாடுகள் உருவாவதுண்டு.

    அத்தகைய ஒரு சூழ்நிலையை தோற்றுவிக்கக்கூடிய ஒரு சட்டத்திற்கான மசோதா கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

    இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இதர மாநில தேர்தல் ஆணையர்கள் ஆகியோரின் நியமனம், சேவைக்கான நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம் சம்பந்தமான ஒரு புதிய மசோதா கடந்த ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி மாநிலங்களைவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    இதன்படி பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் பிரதமர் பரிந்துரைக்கும் ஒரு மத்திய கேபினெட் அமைச்சர் ஆகிய 3 பேரை கொண்ட ஒரு குழு அமைக்கப்படும். இதற்கு பிரதமர் தலைவராக இருப்பார். இக்குழு பரிந்துரைக்கும் நபர்களை இந்திய ஜனாதிபதி தலைமை தேர்தல் ஆணையர்களாகவும், மாநில தேர்தல் ஆணையர்களாகவும் நியமனம் செய்வார்.

    இதற்கிடையே, மத்திய மந்திரி அர்ஜுன்ராம் மேக்வால் கூறுகையில், பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றும் வரை தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை 3 பேர் அடங்கிய குழு தேர்வு செய்யும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றும் வகையில், சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் விதிமீறல் இல்லை என தெரிவித்தார்.

    இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்யும் மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

    • நவீன தொழில் நுட்பங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைந்து பயணிக்க வேண்டும்.
    • வருங்கால மனித சமுதாய வளர்ச்சியில் அறிவியலும், தொழில் நுட்பமும் முக்கிய பங்கு வகிக்கும்.

    சென்னை:

    இன்றைய விஞ்ஞான உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில் நுட்பம் நவீன வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்கள் மற்றும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

    சமீபத்தில் ஒடிசா தனியார் டெலிவிஷன் சேனல் ஒன்று செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்தது. பல்வேறு துறைகளில் இந்த தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

    இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை செயல்படுத்த உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

    சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அவர் இதை தெரிவித்தார். இது தொடர்பாக தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதாவது:-

    செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை சுப்ரீம் கோர்ட்டில் செயல்படுத்த உள்ளோம். நவீன தொழில் நுட்பங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைந்து பயணிக்க வேண்டும்.

    வருங்கால மனித சமுதாய வளர்ச்சியில் அறிவியலும், தொழில் நுட்பமும் முக்கிய பங்கு வகிக்கும்.

    காணொலி மூலம் வழக்குகள் விசாரிக்கப்படுவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • புதிய தலைமை நீதிபதிகள் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு.
    • நீதிபதி சாம் கோஷியை தெலுங்கானா நீதிமன்றத்துக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

    கேரளா, தெலுங்கானா, குஜராத், ஒடிசா உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக ஆஷிஷ் ஜிதேந்திர தேசாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தெலுங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அலோக் ஆராதே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக சுனிதா அகர்வாலும், ஒடிசா உயர்நீதிமன்ற நீதிபதியாக சுபாஷிஷ் தலபாத்ராவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், நீதிபதி சாம் கோஷியை தெலுங்கானா நீதிமன்றத்துக்கு பணி மாறுதல் வழங்கியும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    • கடின உழைப்பை வெளிப்படுத்தினால் வெற்றிகரமான வக்கீல்களாக மாறலாம்.
    • ஒரு குற்றவாளியை போக்சோ வழக்கில் கைது செய்தால் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும்.

    புதுச்சேரி:

    புதுவை-கடலூர் சாலையில் ஒருங்கிணைந்த கோர்ட நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு 14-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் உள்ளன. போக்சோ குற்ற வழக்குகள் மீதான விசாரணை, புதுவை மாவட்ட முதன்மை அமர்வு நீ திமன்றத்தில் செயல்பட்டு வந்தது. போக்சோ வழக்கை தலைமை நீதிபதி விசாரித்து தீர்ப்பளித்து வந்தார்.

    இந்நிலையில் போக்சோ வழக்குகளை மட்டும் விசாரிக்க விரைவு நீதி மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கென தனி நீதிபதியும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த போக்சோ நீதிமன்ற திறப்பு விழா இன்று நடந்தது. ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா போக்சோ விரைவு நீதிமன்றத்தை திறந்து வைத்தார்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், நேரு எம்.எல்.ஏ , ஐகோர்ட்டு நீதிபதிகள் வைத்தியநாதன், இளந்திரையன், புதுவை தலைமை நீதிபதி செல்வநாதன், தலைமை செயலர் ராஜீவ் வர்மா, சட்டத்துறை செயலர் செந்தில்குமார், வக்கீல்கள் சங்க தலைவர் குமரன் மற்றும் புதுவை நீதிபதிகள், வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.

    வக்கீல்கள் அமரும் இருக்கையில் நீதிபதி ராஜா, முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் பிரமுகர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது போக்சோ நீதிமன்றத்தில் 5 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. போக்சோ நீதிமன்ற நீதிபதி சோபனாதேவி தலைமையில் விசாரணை நடந்தது. முதல் குற்றவாளியை அழைத்த போது மின்சாரம் தடைபட்டது.

    இதனால் வந்திருந்தவர்கள் அதிருப்தியடைந்தனர். அப்போது நீதிபதி ராஜா, சற்று கோபத்துடன் மின்சாரத்தை சரி செய்பவர்கள் இங்கு வரமாட்டார்களா? என கேட்டார். தொடர்ந்து ஊழியர்கள் மின் தடையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 10 நிமிடம் மின்சாரம் இல்லை. இருப்பினும் 5 குற்றவாளிகள் அழைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

    இதன்பின் அனைவரும் விழா மேடைக்கு வந்தனர். அங்கு போக்சோ விரைவு நீதிமன்ற பெயர் பலகையை நீதிபதி ராஜா திறந்து வைத்தார்.

    விழாவில் ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா பேசியதாவது:-

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. இதனால் புதுவை மாநிலத்தில் 29 நீதிமன்றங்களாக செயல்பட உள்ளது. புதுவையில் மட்டும் போக்சோ நீதிமன்றத்தோடு 18 நீதிமன்றங்கள் செயல்பட உள்ளன. அதிசயம், அற்புதமான மிக கடுமையான சட்டங்கள் போக்சோ நீதிமன்றத்தில் உள்ளன.

    பல வழக்கில் கொலை, கொள்ளை அடித்தவர்களுக்கு மிகப்பெரும் தண்டனை தரப்படுகிறது. போக்சோவில் விசித்திரமான சட்டதிருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒரு குற்றவாளியை போக்சோ வழக்கில் கைது செய்தால் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும். 18 வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கான சான்றிதழ், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதற்கு காயம், சாட்சிகள் இருந்தால் அவர் குற்றவாளி. குற்றத்தை செய்யவில்லை என அவரின் வக்கீல்கள்தான் நிரூபிக்க வேண்டும்.

    குழந்தைகளை பயமுறுத்துவதுபோல கேள்வி கேட்க முடியாது. போக்சோ குற்றத்தில் ஈடுபட்டால், இறுதி மூச்சு இருக்கும் வரை ஆயுள்தண்டனை விதிக்கப்படும். வக்கீல்கள் போக்சோ வழக்கை சாதாரணமாக நடத்தி விட முடியாது.

    இந்த வழக்கிற்கு இங்கு மட்டும்தான் ஜாமீன் பெற முடியும். ஒரு ஆண்டுக்குள் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும். இந்த வழக்கை கையாள வக்கீல்கள் திறமை களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    குழந்தையின் விபரங்களை வெளியில் தெரிவிக்கக்கூடாது. பெற்றோர்களால் வழக்கை நடத்த முடியாவிட்டால், சட்டப்பணிகள் ஆணையம் மூலம் வக்கீல்களை பெறலாம்.

    பாதிக்கப்பட்ட குழந்தை என நீதிபதி முடிவு செய்துவிட்டால், வழக்கு நடைபெறும்போதே குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து நிவாரணம் வழங்க உத்தரவிட முடியும். கொடுமையான குற்றம் செய்திருந்தால் மரண தண்டனையும் விதிக்கப்படலாம்.

    காலங்கள் மாறி வருகிறது. காலதாமதமின்றி நீதி வழங்கப்படுகிறது. சட்டங்களை அறிந்து கொள்ளாமல் வக்கீல்கள் நீதிமன்றதுக்கு வர முடியாது. வெற்றிகரமான வக்கீல்களாக மாற கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டும். சட்டங்களை பற்றி முழுமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும். வக்கீல்கள் எப்படி, எதை பேச வேண்டும் என அறிந்து பேச வேண்டும். இதனால் வக்கீலும், வக்கீல் தொழிலும், நீதிமன்றமும், நாடும் உயரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சதாசிவம் தான் படித்த வகுப்பறைகளை பார்வையிட்டு வகுப்பறைக்குள் அமர்ந்து நெகிழ்ந்தார்.
    • தொடர்ந்து தான் படித்த வகுப்பறையில் மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

    அம்மாப்பேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மா பேட்டை அருகே சிங்கம்பேட்டை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்த முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் கவர்னருமான பி.சதாசிவம் பள்ளிக்கு திடீரென வந்திருந்தார்.

    அவரை கண்டதும் இன்ப அதிர்ச்சி அடைந்த ஆசிரி யர்கள் வரவேற்பு அளித்து பள்ளிக்கு அழைத்து சென்றனர். பள்ளிக்குள் சென்ற சதாசிவம் தான் படித்த வகுப்பறைகளை பார்வையிட்டு வகுப்பறைக்குள் அமர்ந்து நெகிழ்ந்தார்.

    தான் படித்த காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை நினைவு கூர்ந்து ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

    தொடர்ந்து தான் படித்த வகுப்பறையில் மாணவர்களிடம் கலந்துரையாடினார். பின்னர் நன்றாக படித்து தன்னை போல் ஒரு உயரிய பதவிக்கு வர வேண்டும் என மாணவர்களுக்கு அறி வுரை வழங்கினார்.

    பின்னர் அவர் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் மாணவர்களிடம் பள்ளியின் தற்போதைய வளர்ச்சி குறித்து கேட்ட றிந்தார்.

    மேலும் பள்ளியின் நலன் கருதி பள்ளிக்கு தேவையான வசதிகள். அதனை இந்த பள்ளியில் படித்து உயர்ந்த நிலையில் உள்ள உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என அனைவரிடமும் கலந்து ஆலோசித்து பள்ளிக்கு தேவையான வளர்ச்சிப் பணிகளை எவ்வாறு செய்ய லாம் என்பது குறித்தும் ஆசிரியர்களுடன் கலந்துரை யாடினார்.

    பின்னர் பள்ளி வளாக த்திற்குள் சென்று பள்ளி ஆசிரியர்கள் சார்பில் வைக்கப்பட்ட காய்கறி செடிகள் தோட்டத்தை பார்வையிட்டார்.

    அதே போல் பள்ளி வளாகத்திற்குள் செல்லும் மின் கம்பங்களால் மாணவர்க ளுக்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் ஆசிரியர்களிடம் கேட்டுக்கொண்டார்.

    அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் நாகே ந்திரன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • சஞ்சீவ் குமார் திவாரி என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்
    • இது விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்கு என்று நீதிபதிகள் கூறினர்

    புதுடெல்லி:

    உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் கடந்த 9ம் தேதி பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமானம் செய்துவைத்தார்.

    தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சஞ்சீவ் குமார் திவாரி என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்தார். டி.ஒய்.சந்திரசூடிட நியமனம் அரசியலமைப்புக்கு எதிரானது என அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர். இது விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்கு என்று கூறிய நீதிபதிகள், வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

    இதே கோரிக்கையுடன் கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் புதிய நடைமுறையை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
    • அவசர வழக்குகளை விசாரிக்க வழக்கம்போல முறையீடு செய்யலாம்.

    புதுடெல்லி :

    சுப்ரீம் கோர்ட்டில் ரிட், மேல்முறையீடு, இடையீட்டு மற்றும் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்படும்போது ஆன்லைன் மூலம் முதலில் பதிவாளருக்கு அனுப்ப வேண்டும். அவர் இதனை பரிசீலனை செய்து தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கிறார்.

    இதனை அவர் ஆய்வு செய்து, வழக்குகளை எந்த அமர்வு விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு பதிவாளருக்கு உத்தரவிடுவார். இந்த நடைமுறை காலதாமதமாகும்போது மனுதாரர் சார்பில் ஆஜராகும் வக்கீல்கள் தலைமை நீதிபதி அமர்வில் ஆஜராகி தங்களது மனுவை அவசரமாக விசாரிக்க கோரிக்கை விடுக்கலாம்.

    இதற்கிடையே புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று புதிய நடைமுறையை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    வாரத்தில் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை அடுத்த வாரம் திங்கட்கிழமைக்கு விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்.

    இதேபோல் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை அடுத்த வாரம் வெள்ளிக்கிழமைக்கு விசாரணைக்கு தானாக பட்டியலிடும் வகையிலும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    இந்த நடைமுறையை செயல்படுத்துமாறு பதிவாளர் அலுவலகத்துக்கு உத்தரவிட்டு உள்ளேன். அவசர வழக்குகளை விசாரிக்க வழக்கம்போல முறையீடு செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த யு.யு.லலித் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்தது.
    • சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இன்று பதவியேற்கிறார்.

    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த யு.யு.லலித்தின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. மேலும் அவருடைய அலுவல் பணிகளும் முடித்து வைக்கப்பட்டன.

    இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இன்று பதவியேற்க உள்ளார். புதிதாக பொறுப்பேற்கும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இதன்மூலம் நாட்டின் 50-வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்பார்.

    கடந்த 1998-ம் ஆண்டு கூடுதல் சொலிசிடர் ஜெனரலாக பணியாற்றிய டி.ஒய்.சந்திரசூட், 2013-ம் ஆண்டு அலகாபாத் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். பின்னர் 2016-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். சுப்ரீம் கோர்ட்டின் 50-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் டி.ஒய்.சந்திரசூட் 2024-ம் ஆண்டு நவம்பர் 10 வரை தலைமை நீதிபதியாக நீடிப்பார்.

    • மத்திய அரசுக்கு தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் சிபாரிசு செய்தார்.
    • நவம்பர் 9-ந்தேதி புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்கிறார்.

    புதுடெல்லி :

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித், அடுத்த மாதம் 8-ந்தேதி ஓய்வு பெறுகிறார்.

    அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை சிபாரிசு செய்யுமாறு தற்போதைய தலைமை நீதிபதியிடம் மத்திய அரசு கேட்பது வழக்கம். அதுபோல், அடுத்த தலைமை நீதிபதி பெயரை சிபாரிசு செய்யக்கோரி, கடந்த 7-ந்தேதி மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு, தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு கடிதம் எழுதினார்.

    இந்தநிலையில், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பெயரை அடுத்த தலைமை நீதிபதி பதவிக்கு யு.யு.லலித் சிபாரிசு செய்துள்ளார். மத்திய அரசுக்கு எழுதிய அந்த சிபாரிசு கடிதத்தின் நகலை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டிடம்யு.யு.லலித் ஒப்படைத்தார்.

    தனக்கு அடுத்த இடத்தில் உள்ள மிக மூத்த நீதிபதியை தலைமை நீதிபதி சிபாரிசு செய்வது வழக்கம். அதற்கேற்ப யு.யு.லலித் சிபாரிசு செய்துள்ளார்.

    நீதிபதி சந்திரசூட், நவம்பர் 9-ந்தேதி புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்கிறார். அவர் நாட்டின் 50-வது தலைமை நீதிபதி ஆவார். 2 ஆண்டுகள், அதாவது 2024-ம் ஆண்டு நவம்பர் 10-ந்தேதிவரை அப்பதவியில் இருப்பார்.

    நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீண்ட காலம் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த ஒய்.வி.சந்திரசூட்டின் மகன் ஆவார். அவருடைய தந்தை, 1978-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந்தேதி முதல் 1985-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதிவரை தலைமை நீதிபதியாக இருந்தார்.

    நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் படித்தார். டெல்லி பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி. படித்தார். அமெரிக்காவில் ஹார்வர்டு சட்ட பல்கலைக்கழகத்தில் எல்.எல்.எம். பட்டமும், டாக்டர் பட்டமும் பெற்றார்.

    சுப்ரீம் கோர்ட்டிலும், மும்பை, குஜராத், கொல்கத்தா, அலகாபாத், மத்தியபிரதேசம், டெல்லி ஆகிய ஐகோர்ட்டுகளில் வக்கீலாக பணியாற்றினார். 1998-ம் ஆண்டு, அவரை மும்பை ஐகோர்ட்டு மூத்த வக்கீலாக அறிவித்தது. அதே ஆண்டில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆனார்.

    2000-ம் ஆண்டு மார்ச் 29-ந்தேதி, மும்பை ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2013-ம் ஆண்டு அக்டோபர் 31-ந்தேதி, அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதியாக மாற்றப்பட்டார்.

    2016-ம் ஆண்டு மே 13-ந்தேதி முதல், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.

    • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு.
    • தற்போதைய பொறுப்பு தலைமை நீதிபதி பதவிக்காலம், 21ந் தேதியுடன் நிறைவடைகிறது.

    சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள துரைசாமி வரும் 21-ந் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்துள்ளதாக, மத்திய சட்டத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி அண்மையில் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

    ×